Wednesday 19 December 2012

நீதானே என் பொன்வசந்தம்

வருண் மற்றும் நித்யாவின் காதல் கதையில் சில தருணங்கள்.

எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், "புடிக்கல மாமு" பாட்டில் ஆரம்பிக்கும் படம், "போதும் மாமு"னு சொல்ற வரைக்கும் போகுது! முதல் பாதியில் ஜீவா , சமந்தாவின் காதலை சொன்ன கெளதம், பிற்பாதியில் அவர்களின் சண்டைகளையே மிகுதியாக காண்பித்திருக்கிரார்.
"காதல்","சண்டை","காதல்","சண்டை" என்றே படம் நகர்கிற்து.
"CHILLOUT MACHA" என்று சொல்லும் சந்தானம் , படத்திற்கு பலம். பின்னால் காணாமல் போனதால் என்னவோ படம் இழுக்கிறது,. சிறு வயதில் ஜீவா சமந்தாவைக் காடிலும் பெரிதாக தெரிகிறார்.
பல இடங்களில் "விண்ணைத்தாண்டி வருவாயா" எட்டிப்பார்கிறது.
கதை முழுவதையும் தாங்கி நிற்பது இளையராஜாவின் பாடல்கள். முக்கியமான இடங்களில் பின்னனி இசை இல்லாமல் இருப்பது ஒரு புதிய முயற்சியாக் கூட இருக்கலாம். நா.முத்துக்குமார் பாடல் வரிகளே கதையை சொல்லிவிடுகிறது.
திரையில் எப்போதும் வருண் , நித்யா முகம் சலிப்புத்தட்டுகிறது. எவ்வளவு நாள்தான் இந்த மாதிரி காதல் படம் எடுப்பிங்க கெளதம்?
சில இடங்களில் நிளமானகாட்சிகளை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் இந்த படம் முழுக்க முழுக்க காதலர்களுக்கானது. (யாருக்குத் தெரியும், இது அவர்களில் சிலர்க்கும் பிடிக்காமல் போகலாம்!)
SHORT CUT -
> Vtv 2
>This one for youngsters
>Another same kind of flick from GVM

No comments:

Post a Comment