Sunday 17 February 2013

HOAX என்றால்??

HOAX
Hoax Messages (ஏமாற்று குறுந்தகவல்கள்)

நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறே விஷயம் ஹோக்ஸ் (Hoax). அது என்ன ஹோக்ஸ்? அதற்கு முன்னாடி இந்த குறுந்தகவலை படிக்கவும் ,  

Dear brothers and sisters,  I am Renuka,  My no -  94213 *****,  I am suffering from Heart disease.  Doctors say that I have to get into a operation that costs 10 lakhs, if you forward this message to 1 person I will get 1 Paisa.  All telecom companies agreed to pay. Please forward this message to maximum number of people as fast as you can and save my life"

இது ஒரு SMS மெசேஜ் . இதில் ரேணுகா என்பவருக்கு  இதய நோய் என்றும் , அதை குணப்படுத்துவதற்கு செலவாகும் தொகையை  நாம்  இந்த மெஸேஜ்யை மற்றவர்களுக்கு அனுப்புவதன்மூலம்  பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த  மெஸேஜ் நமக்கு நம் நண்பர்கள் மூலமாக வரும். நாம் இதை பரிதாபப்பட்டு ஒரு 10 பேருக்கு அனுப்புவோம். அவ்வாரே இது அனைவரையும் சென்றடையும்.

இந்த மாதிரி குறுந்தகவல்களை 'HOAX MESSAGES' என்றழைப்பார்கள். இந்த குறுந்தகவல் முழுக்க முழுக்க கட்டுக்கதையே! இவை யாரோ ஒருவரால் எழுதப்பட்டு அனுப்பபடுகின்றன. [மேலே இருப்பது என்னுடைய கற்பனையே!]

சரி எதற்காக இந்த மாதிரி ஹோக்ஸ்கள் அனுப்பபடுகின்றன? நான் எடுத்துக்காட்டாக கூறியுள்ள மெஸேஜினால்ஆபத்து வர வாய்ப்பில்லை ஆனால், இந்த மாதிரி ஹோக்ஸ்களை பயன்படுத்தி சிலர் "MARKETING" செய்ய ஆரம்பித்துள்ளனர். இது ஆபத்தான விஷயம். அதாவது ஒரு இணையதளத்தின்(WEBSITE) அல்லது ஒரு விளைபொருளின் இணைய இணைப்பை அனுப்பி, இதை பத்து பேருக்கு அனுப்பினால் ரீசார்ஜ் ஆகும் என்று கூறி குருந்தகவல்கள் வரும். அதை கிளிக் செய்தால் அவ்வளவுதான், அபெஸ்..!!!

இது போன்ற குறுந்தகவல்களை நம்பி அனுப்புபவன் முட்டாள் என்று கூற முடியாது! எனெனில் அவன் முட்டாள் ஆக்க பட்டுள்ளான்.! கையில் ஒரு செல் போனையும் அதில் அளவுக்கு அதிகமான SMS வசதிகளை வைத்திருப்பவன் தான் இது போன்றவறை நம்பி அனுப்புவான். (அவர்களுக்கே இது வேலை செய்யாது என்றுகூட தெரிந்திருக்கும்!)

இதில் இன்னும் வருத்ததிற்குரிய விஷயம், இந்த குறுஞ்செய்தி  உண்மையானது , இது பிரபல நாளிதழில் வந்துள்ளது என்று கூறி குறுஞ்செய்தி வருவதுதான்.!

இதையேல்லாம் நம்புவதற்கு நாம் மூடர்கள் அல்ல! அனைவருக்கும் 'சுயஅறிவு' என்று ஒன்று இருக்கிற்து.

* ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தால் எவ்வாறு ஒருவருக்கு 1 மெஸேஜ்க்கு 1 பைசா  விகிதம் வாரி வழங்க முடியும்? (அதுவும் பரிதாபப்பட்டு!)

* நிங்க மெஸேஜ் செய்வதற்கும்  உங்கள் USSD கும் [UNSTRUCTURED SUPPLEMENTARY SERVICE DATA] என்ன சம்பந்தம்?

* "நாளிதழில் வந்துள்ளது" போன்ற  மெஸேஜை  சரிபார்த்ததுண்டா?

இது போன்ற பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை! இவைகளை அனுப்புபவரை கைது செய்ய சட்டம் உண்டு ஆனால் அவர்களை கண்டுப்பிடிப்பது அரிது!

என்னதான் இப்போது வாட்சப் (Whatsapp) , வீ சாட் (WeChat) போன்ற நவீன சேவைகள் வந்துவிட்டாலும் ஹோக்ஸ்களின் எண்ணிக்கை  குறைந்தபாடில்லை .

சரி இப்போதைக்கு மாணவர்கள் ஆகிய நாம்  செய்ய வேண்டியது , நமக்கு வரும் HOAXகளை பரப்பாமல் அழித்துவிடுவதுதான்! (இதை  அழித்தால் ஆபத்து என்று வருவதையும் நம்பகூடாது !!)
" SAY NO TO HOAX "


(இந்த தகவல் பிடித்திருந்தால் , Facebook அல்லது  twitterல் SHARE பன்னுங்க அவங்களும் தெரிஞ்சுகட்டும்!!!!)

நன்றி

1 comment:

  1. yea its true.............today i got a maessage from vodafone that "if u r going to send sms of these types u shld be registered member otherwise ur number will barred"..............good to have this service..............

    ReplyDelete