Monday 18 February 2013

நீயா நானா - சில விளக்கங்கள்


இந்த பதிவு , சமிபத்தில் (10/02/2013) ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சியைப் பற்றி. அதன் உரளி இதோ -




தமிழ்நாட்டு Classroom மாணவர்களுக்கும்  Activitists , NGOஸ்க்கும் நடந்த வாக்குவாதம் அது. சரி இதை ஏன் இப்போ பெரியதாக பேசனும்? இது உங்கள் கேள்வியா இருக்கலாம். ஏன் என்று இந்த பதிவின் முடிவில் விளங்கும். சரி ஆரம்பிக்கலாம்,


"தமிழ்நாட்டின் தலையாய சமூக பிரச்சனை எது?"
இது மாணவர்கள் முன் வைக்கப்பட்ட முதல் கேள்வி. இதற்கு அவர்களிடமிருந்து வந்த முதல் பதில் "மின்சாரம்" . பிறகு பலர் sexual abuse, child labour என்ரெல்லாம் கூறினார்கள். ஆமாம் அதேல்லாம் சரி தான் வேற என்ன என்று கேட்டிருக்கலாம் கோபி, ஆனால் அவ்வாறு கேட்காமல், அதில் உங்களுக்கு எவ்வளவு தெரியும்? அதன் பூர்வீகம் என்ன என்ரெல்லாம் கேட்டார். அதை சரியாக தெரிந்துகொள்ளாமல் மாணவர்கள் பேசுவது போல் சித்தரித்திருந்தார்கள். இது வருத்ததிற்குறியது. அவற்றை சரியாக தெரியாமல் பேசுவது அறியாமைதான் ஆனால் அதையேயே குத்திக்காட்டி பேசுவது தவறு.
பிறகு மாணவர்களிடமிருந்து வந்த பதில் " பெண்களுக்கு பாதுகாப்பின்மை ". இந்த பிரச்சனை சமீபத்தில் நடந்த டில்லி விவகாரத்தால் ஏற்பட்ட விழிப்புணர்வு என்று சொல்லலாம். அதற்கு முன் இவ்வாரான பிரச்சனைகள் பத்தோடு பதிணொன்றாக செய்திகளில் படித்து பார்த்து வந்தனர், ஆனால் இந்த டில்லி விவகாரம் ஊடகங்களால் பெரிதுபடுத்தி காட்டப்பட்டதால் வந்த சமூக விழிப்பூணர்வு.
அடுத்தது போதை பொருட்கள் , ஜாதி பிரச்சனை என ஒவ்வொன்றாக மாணவர்கள் முன்வைத்தனர்.
கூடங்குளம் பிரச்சனை பற்றி பேசியபோது "நீங்கள் அங்கு சென்று பார்த்ததுண்டா?" என்ரெல்லாம் அபத்தமான கேள்விகளை Activitists கேட்டார்கள். இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.!!
கூடங்குளம் பற்றி பேச வந்த மாணவரையும் பேசவிடவில்லை கோபிநாத்.
பிறகு இந்த Facebook , twitter போன்ற சமூகதளங்களில் இளைஞர்கள் வெறும் பொழுதுப்போக்குக்காகவே பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னார்கள் , இது ஒரு புறம் உண்மை என்றாலும் இது போன்ற இணையத்தில் மக்கள் அதிகம் தெரிந்துகொள்கின்றனர் என்பதுதான் உண்மை.!
சரி இப்போது இளைஞர்கள் தடுமாறியவற்றைப் பார்க்கலாம்,
* எம்.எ தமிழ் இலக்கியம் படித்த மாணவருக்கு தமிழில் உள்ள எழுத்தாளர்கள்ப் பற்றி தெரியவில்லை. இதை என்ன என்று சொல்லுவது. கேட்டால் தமிழ் ஆர்வத்தை சமூகம் குறைத்துவிட்டது என்கிறார்.
* கிரமப்புர மக்கள் தான் லஞ்சம் கொடுத்து ஆதரிக்கின்றனர் என்று ஒரு பெண் கூறுகிறார்.
* தமிழக மீனவர்கள்ப் பற்றி எனக்கு தெறியாது, NO IDEA என்று சொல்பவர்கள்.!
* நாங்கள் போதைப் பொருட்களைப் பற்றி பேசுவோம் ஆனால் எங்கள் கண்களுக்கு மது பெரிய தப்பாக தெரியாது என்று அவர்கள் உள்ளனர்.!
இன்றைய இளைஞர்கள் சரிவர தெரிந்துகொள்ளாமல் மற்றவரை கிண்டல் அடிப்பதற்கு பழகிவிட்டனர் என்று கோபிநாத் சொன்னதை எற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இவர்களிடம் பொதுப்பார்வை இல்லை என்று கூறலாம். இவர்கள் தங்களை சுற்றியே பார்த்து சமூகத்தை எடைப்போட்டுவிட்டனர்.!
இந்த சபையில் அடுத்து பெரியதாக விவாதிக்கப்பட்டது "ரிசர்வெஷன்" பற்றி. அதை அனுபவித்தவர்களே அது வேண்டாம் என்று சொல்லுவது சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.!
இறுதியாக ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை மாணவர்களுக்கு பரிந்துரைத்தனர். அதில் அதிகம் வலியுருத்தப்பட்டது தந்தை பெரியாரின் புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.!
இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் பிரசாந்த் அவர்கள் தான் , அவருக்கு நன்றி . இந்த நியா நானா குறித்து அவரது கருத்துக்கள் வீடியோ வடிவில்...



நாட்டில் உள்ள அணைத்து இளைஞர்களும் நாட்டு நடப்பை அறிந்துவைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.!
பதிவை படித்ததற்கு நன்றி.!

No comments:

Post a Comment